தமிழகத்தில் 31ஆம் தேதி வரை கல்லூரிகள் விடுமுறை
தமிழகத்தில் 31ஆம் தேதி வரை கல்லூரிகள் விடுமுறை
கொரானா மற்றும் ஒமிக்ரான் பரவலை தடுக்க தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் 14 ஆம் தேதியிலிருந்து 18ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை,
அதேபோல் வருகிற 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு
பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% மட்டும் பயணிகள் பயணிக்க அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 31-ம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை என அரசு அறிவித்துள்ளது. பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு வரும் ஜனவரி 31-ம் தேதி வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 20 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
Tags: தமிழக செய்திகள்