ஆதார்கார்டு திருத்தமா!!! பிப்.22 முதல் அஞ்சல் துறை சார்பில் சிறப்பு முகாம்!!!
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் இந்திய அஞ்சல் துறை சார்பாக பிப்ரவரி 22 முதல் சிறப்பு ஆதார் முகாம் நடைபெறவுள்ளது. மேலும் பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண் மாற்றுதல், போன்றவற்றை இந்த முகாமில் மாற்றி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிப்ரவரி 22ம் தேதி முதல் 27ம் தேதி வரை சிறப்பு ஆதார் முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் ஆதார் அட்டையில் பிறந்த தேதி மாற்றம், முகவரி, மொபைல் எண் மாற்றுதல் போன்ற சேவைகள் வழங்கப்படவுள்ளது.
இந்த முகாமில் புதிதாக ஆதார் கார்டும் இலவசமாக எடுக்கப்படும் திருத்தம் செய்ய மட்டும் ரூ.50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சல் ஆதார் சேவை மையம் மற்றும் அஞ்சல் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.
Tags: தமிழக செய்திகள்