1000க்கும் மேற்பட்ட குழந்தைகள், பொதுமக்கள் தஞ்சம் அடைந்த தியேட்டரில் ரஷ்யா குண்டு வீச்சு. வீடியோ!! 1000-க்கும் மேற்பட்டோரின் கதி என்ன?..!
ரஷ்யா கடந்த 22 நாட்களாக உக்ரைன் நாட்டின் மீது போர் புரிய வருகிறது.இதனால் உக்ரைனில் பல்லாயிரம் பேர் உயிரிழந்துள்லார்கள், பல இடங்கள் தரைமட்டமாகியுள்ளது, அதேசமயம் பல இடங்களை உக்ரைனிடமிருந்து ரஷ்யா கைப்பற்றியுள்ளது, பல நாடுகள் போரை நிறுத்தகூறியும் அது நிறுத்தவில்லை,மேலும் பல்வேறு நாடுகள் பொருளாதார தடையும் ,பல கட்டுப்பாடுகளையும் ரஷ்யா மீது விதித்துள்ளன,இந்த நிலையில் உக்ரைனில் உடனடியாக போரை நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் ரஷ்யா விடாப்பிடியாக உக்ரைன் மீது தன் தாக்குதலை தீவிரமாக நடத்தி வருகின்றது
இந்நிலையில் உக்ரைனின் தெற்கு பகுதியான மரியபோல் நகரை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்துள்ளன.இதன்காரணமாக,அப்பகுதியில் உள்ள 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில்,உக்ரைனில் மரியபோல் நகரில் 1000-க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் தங்கியிருந்த திரையரங்கில் ரஷ்யா குண்டு வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆனால்,இந்த தாக்குதலில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை
வீடியோ:-
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ