12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25 முதல் செய்முறை தேர்வு
தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ள நிலையில் 12 ஆம் வகுப்புகள் வரை அனைத்து வகுப்புகளும் நேரடியாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் 12ஆம் வகுப்புக்கு மே 5-ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையும் 11ஆம் வகுப்புக்கு மே 9-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையும் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது அதேபோல 10-ஆம் வகுப்புக்கு மே 6-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே இரண்டாம் தேதி வரை செய்முறை தேர்வு நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
செய்முறை தேர்வு மதிப்பெண்களை மே 4ம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்