தென்காசியில் 26 ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்
தென்காசி மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தென்காசி 'ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 26.03.2022 (சனிக்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 3,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இம்முகாமில் 8th to Any Degree, Engineering, ITI , Diploma, Teacher, Nursing, Pharmacy, Management, Driver உள்ளிட்ட தகுதிகளை உடைய வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வேலைவாய்ப்பு முகாமின் வாயிலாக தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறும் பயனாளிகளின் வேலைவாய்ப்பக பதிவு விவரங்கள் ரத்து செய்யப்பட மாட்டாது.
இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள இளைஞர்கள் மற்றும் வேலைநாடுநர்கள் தமிழ்நாடு தனியார்துறை வேலைவாய்ப்பு இணையதளமான www.tnprivatejobs.tn.gov.in-ல் பதிவு செய்து கலந்து கொள்ளலாம். தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுய விவர குறிப்புடன் (Bio- Data) முகாமில் நேரடியாக கலந்து கொள்ளலாம்.
கல்விதகுதி:
8,10,12. ஆம் வகுப்பு
ITI. Diploma. பட்டப்படிப்பு,
பொறியியல் பட்டதாரிகள்
வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் நாள்:
26.03.2022 காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை
வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்:
ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
தென்காசி
வேலை வாய்ப்பில் பங்குபெற முன்பதிவு செய்ய:
மேலும் விவரங்களுக்கு:
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/382203180001
Tags: வேலைவாய்ப்பு