BREAKING வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு
பொதுவாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.அதன்படி,மார்ச் 1 ஆம் தேதியன்று சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.105 உயர்ந்து ரூ.2,145.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில்,வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.967 அதிகரித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் சென்னையில் ரூ 825 க்கு எரிவாயு சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டது.
அதன் பிறகு ஜூலை மாதம் ரூ 25.50 உயர்ந்து ரூ 850.50 க்கு விற்பனையானது.
ஆகஸ்ட் மாதம் மீண்டும் ரூ 25 உயர்ந்து ரூ 875.50 க்கு விற்பனையானது
செப்டம்பர் மாதம் மீண்டும் ரூ 25 உயர்ந்து ரூ 900.50 க்கு விற்பனையாகி வந்தது.
அது போல் அக்டோபர் மாதம் 17 ரூபாய் அதிகரித்து சிலிண்டர் விலை ரூ 917.50 க்கு விற்பனையானது.
நவம்பர், டிசம்பர், ஜனவரி 2022, பிப்ரவரி மாதங்களில் சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ரூ 917.50 க்கே விற்பனை செய்யப்பட்டு வந்தது.
நான்கரை மாதங்கள் உயராத சிலிண்டர் விலை சுமார் நான்கரை மாதங்களுக்கு மேலாக சிலிண்டர் எரிவாயு விலை உயராமல் இருந்தது. இந் நிலையில் சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ 50 அதிகரித்துள்ளது.
அதன்படி,சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து,ரூ.967.50 விற்பனை செய்யப்படுகின்றது.
சுமார் நான்கரை மாதத்திற்கு பிறகு இன்று பெட்ரோல்,டீசல் விலை 76 காசுகள் அதிகரித்த நிலையில்,வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்