கோழி, காய்கறி, கொடுத்தா எடைக்கு எடை பிரியாணி...ஆப்பரில் அசத்தும் பிரியாணி கடை....
அட்மின் மீடியா
0
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சோத்துப்பாக்கம் இயங்கிவரும் ஆம்பூர் பிரியாணி கடை அதிரடி ஆஃபர் பழங்காலத்து முறைப்படி பண்டமாற்று முறையை பின்பற்றி பிரியாணி விற்பனை செய்து வருகிறது.
அதன்படி, நாட்டுக்கோழி ஒரு கிலோ கோழி எடைக்கு ஒன்றரை கிலோ பிரியாணி வழங்கப்படும். அதுபோல பிராய்லர் கோழி எடைக்கு எடை பிரியாணி விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் தமிழகத்தில் விளையக்கூடிய காய்கறிகளானபச்சை மிளகாய், கத்தரி, வெண்டை, தக்காளி, முருங்கை போன்ற காய்கறிகளை பண்டமாற்று முறையில் பெற்றுக் கொண்டு அதன் இன்றைய மதிப்புக்கு ஏற்றாற்போல் பிரியாணி வழங்கப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்