இந்தியாவில் 22 யூடியூப் சேனல்கள் முடக்கம்..! மத்திய அரசு அதிரடி..! காரணம் என்ன ?
தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல் பரப்பிவருவதால் 22 யூடியூப் சேனல்களை முடக்கியுள்ளதாக தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீரில் நிலவும் பிரச்சனைகள் மற்றும் உக்ரைன் நாட்டில் நிலவும் பிரச்சனைகள் குறித்து தவறான போலியான செய்திகளை சுமார் 22 யூடியூப் சேனல்கள் பரப்பி வந்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவு மற்றும் சட்டம், ஒழுங்கு தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதின் காரணமாக 18 இந்திய யூடியூப் சேனல்கள், பாகிஸ்தானை சேர்ந்த 4 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன. 3 டுவிட்டர் கணக்குகள், ஒரு பேஸ்புக் கணக்கு மற்றும் ஒரு செய்தி இணையதளமும் முடக்கப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்