தமிழக முதல்வர் குறித்து அவதூறு பாஜக பிரமுகர் கைது
சமூகவலைதளங்களில் அவதூறு கருத்து பரப்புவோர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் கரூர் மாவட்டம் பாஜக நிர்வாகி விக்னேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் குறித்து அவதூறு கருத்து பரப்பி உள்ளார். இதுகுறித்து திமுக தகவல் தொழில் நுட்ப அணி கொடுத்த புகாரின் அடிப்படையில் முனியப்பனுர் வீட்டிலிருந்த பாஜக நிர்வாகி விக்னேஷை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றபொழுது அவரது ஆடை குறித்து அவதூறு பரப்பியதாக எடப்பாடியை சேர்ந்த பாஜக பிரமுகர் அருண் பிரசாத் என்பவரும், திருமணவிழாவில் முதல்வரை விமர்சித்ததாக பா.ஜ.க.வின் கன்னியாகுமரி மாவட்ட பிரச்சார அணித் தலைவா் ஜெயிரகாஷ் என்பவரும் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags: தமிழக செய்திகள்