தலித் சிறுவனை காலை நக்க வைத்து துன்புறுத்திய உயர் சாதி இளைஞர்கள் வைரல் வீடியோ
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுவனை தாக்கி ஒருவர் கால்களை நக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் ஏப்ரல் 10 ஆம் தேதி நடந்துள்ளது இது குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானதை தொடர்ந்து 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவரின் எழுத்துப்பூர்வ புகாரின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காரணம் என்ன:-
10 ஆம் வகுப்பு படிக்கும் இந்த மாணவனின் தந்தை உயிரிழந்து விட்ட நிலையில் தாயுடன் வசித்து வருகிறார் அந்த மாணவனின் தாய் விவசாய நிலத்தில் வேலை பார்த்து வந்து உள்ளார் ஆனால், அவர் பார்த்த அந்த வேலைக்கான கூலி அவருக்கு தரவில்லை கூலியை கேட்டு அந்த மாணவன் குறிப்பிட்ட அந்த நபர்களின் வீட்டிற்கு சென்று பணம் கேட்டு உள்ளார்.
அப்போது அந்த வீட்டில் இருந்த உயர் சாதி இளைஞன் தனது சக நண்பர்கள் மற்றும் மற்ற உயர் சாதி இளைஞர்களுடன் சேர்ந்து, கூலி கேட்டு வந்த இந்த மாணவனை கொடூரமான முறையில் அடித்து தாக்கி உள்ளனர்.குறிப்பாக மாணவனின் சாதிப் பெயரைச் சொல்லி கடுமையான சொற்களைக்கொண்டு திட்டுகிறார்கள்.
அப்போது, அங்கு ஒரு பைக்கில் உட்கார்ந்திருந்த ஒரு இளைஞன், அந்த மாணவனுக்கு தண்டனை தருகிறேன் என்று கூறி தனது கால்களை நக்கச் சொல்கிறார் இதனால், பயந்து நடுங்கிய அந்த 10 ஆம் வகுப்பு மாணவன், பயந்து நடுங்கிக்கொண்டே அந்த இளைஞரின் காலை நக்குகிறார்.
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள்