தமிழகத்தில் ரமலான் பிறை பார்க்கப்பட்டது -ஜமா அத்துல் உலமா சபை அறிவிப்பு
அட்மின் மீடியா
0
இன்று முதல் பிறை தென்பட்டதால் இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு நாளை முதல் கடைப்பிடிக்கப்படுகிறது.
முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகும்.இந்த மாதத்தில் தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது. இந்த ஆண்டு ஏப்ரல் 3 முதல் மே 2 ம் தேதி வரை நோன்பை கடை பிடிப்பார்கள். ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து நோன்பு கடைப் பிடிக்கப்படும். ரமலான் மாத இறுதியில் பண்டிகை கொண்டாடப்படும்
.இன்று மாலை பிறை தென்பட்டதாக தலைமை காஜி அறிவித்திருந்தார். அதன்படி ரமலான் நோன்பு இன்று தொடங்கியது.
கண்ணியமிகு ஆலிம் பெருமக்கள் மற்றும் அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இன்று (02-04-2022) ரமளான் பிறை பார்க்கப்பட்டது. இறையருளால் ரமளான் தொடங்கியது என தமிழக அரசின் தலைமை காஜி ஸாஹிப் அறிவித்துள்ளார்கள் கொள்கிறோம். என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கின்றோம் என ஜமா அத்துல் உலமா சபை அறிவித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்