தமிழகத்தில் கொரானா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கம்! தடுப்பூசி கட்டாயம் உத்தரவு வாபஸ்!!.தமிழக அரசு
தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், பொது மக்கள் முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொடர்பாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அவசியமில்லை என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொது இடங்களுக்கு வருபவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம் என்று சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்த நிலையில் தற்போது அது ரத்து செய்யப்பட்டுள்ளது அதேபோல் கொரோனா தொடர்பாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அவசியமில்லை*தடுப்பூசி, முகக்கவசம், தனிமனித இடைவெளி ஆகியவை சுய விருப்பத்தின் அடிப்படையில் பின்பற்ற வேண்டும்.*தமிழக பொது சுகாதார துறை சட்டத்தில் கட்டுப்பாடுகளை திரும்ப பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை உத்தரவு.
Tags: தமிழக செய்திகள்