குரூப் 2 தேர்வு எழுதுவோருக்கான கட்டுப்பாடுகள் என்ன என்ன முழு விவரம்....
2022ம் ஆண்டு நடைபெற உள்ள குரூப் 2, 2ஏ தேர்வு, மே 21-ம் தேதி காலை 9.30 மணிக்குத் தொடங்கி 12.30 மணிவரை நடைபெறுகிறது.
மேலும் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டுஉள்ளது
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு உள்ள அறிக்கையில்
தேர்வில் ஜெல் பேனா, பால் பாயிண்ட் பேனாக்களைப் பயன்படுத்தலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியார் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, 2 ஏ தேர்வு எழுதுவோர் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
முகக்கவசம் அணிந்து வருவோர் மட்டுமே தேர்வு மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.
தேர்வர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்
செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதி இல்லை.
கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
முறைகேடுகளில் ஈடுபடும் தேர்வர்கள் மீண்டும் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும். தேவைப்பட்டால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தத் தேர்வுகளுக்கான முடிவுகள், ஜூன் 5ஆம் தேதி வெளியாக உள்ளன
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு