12 ம் வகுப்பு படித்த பெண்களுக்கு 28ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் முழு விவரம் job fair
புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் அக்.28-ம் தேதி பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் முன்னணி நிறுவனமான டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கலந்து கொண்டு பெண்களுக்கான வேலைவாய்ப்பை வழங்கவுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் 28 ஆம் தேதி தனியார் நிறுவனமான டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள் பங்கேற்கலாம். மேலும் இவர்களின் வயது வரம்பு 18 முதல் 20 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது.இதில் பங்கேற்க விருப்பம் உள்ள பெண்கள் தங்களின் கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை, சுயவிவர குறிப்பு, புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.மேலும் இந்த முகாமில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு டாடா நிறுவனத்தில் 12 நாட்கள் பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் முகாமில் பணி நியமனம் செய்பவர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்க்கு முன்பு டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கள்ளக்குறிச்சி மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
job fair in tamilnadu
job fair
Tags: வேலைவாய்ப்பு