மார்ச் 5-ந் தேதி சென்னையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி முழு விவரம் chennai jallikattu
சென்னையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி மார்ச் 5-ந்தேதி நடக்கிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல் முறையாக சென்னை அடுத்த படப்பை கரசங்கால் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி மார்ச் 5-ந் தேதி நடத்தபடும் என அமைச்சர் தாமோ அன்பரசன் கூறியுள்ளார்
தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஜல்லிகட்டு போட்டிகள் நடத்தப்பட்டாலும் தலைநகர் சென்னையில் இதுவரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவே இல்லை. இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். இந்நிலையில் வருகிற மார்ச் மாதம் 5ஆம் தேதி சென்னை படப்பையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், முதல்வர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முதல் முறையாக சென்னை அடுத்த படப்பை கரசங்கால் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி மார்ச் 5ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதுபோட்டியில் முதல் இடம் பெறும் காளையின் உரிமையாளருக்கு காரும், மாடுபிடி வீரருக்கு மோட்டார் சைக்கிளும் பரிசாக வழங்கப்பட உள்ளது என அமைச்சர் தாமோ அன்பரசன் கூறினார்.
Tags: தமிழக செய்திகள்