பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு தடை மீறினால் கடைளுக்கு சீல் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!! Plastic Ban In Kodaikanal
கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்யும் கடைகளை சீல் வைக்கும்படி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடைக்கானல் தமிழகத்தில் உள்ள முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இந்த சுற்றுலா தலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தடையை மீறி, கொடைக்கானல் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதே போல் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்