காவிரி ஆற்றில் மூழ்கிய 4 மாணவிகள் உயிரிழப்பு..! நிதி உதவி அறிவித்த முதல்வர்
கரூரில் காவிரி ஆற்றில் மூழ்கிய 4 மாணவிகள் சடலமாக மீட்கப்பட்டனர்.கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் பள்ளி மாணவிகள் 4 பேர் தண்ணீரில் மூழ்கினர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த நான்கு மாணவிகளும் திருச்சியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்க சென்றபோது மாயனூர் காதவனை அருகே உள்ள காவிரி ஆற்றில் தமிழரசி, சோபிகா, இனியா, லாவண்யா ஆகியோர் குளிக்க இறங்கியுள்ளனர்.
ஆற்றில் சுழல் உள்ளதை அறியாமல் ஒரு மாணவி ஆற்றில் இறங்கியபோது நீரில் மூழ்கியுள்ளார். ஆற்றில் மூழ்கிய மாணவியை காப்பாற்ற முயன்றபோது மற்ற 3 மாணவிகளும் சுழலில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து ஆற்றில் மூழ்கிய நான்கு மாணவிகளையும் தேடும்பணி தீவிரமாக நடைபெற்றது.இந்நிலையில் ஆற்றில் மூழ்கிய நான்கு மாணவிகளும் உயிரிழந்துள்ளனர். அதனை தொடர்ந்து ஆற்றுக்கு அழைத்துச் சென்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் தலைமை ஆசிரியர் மற்றும் மாணவிகளை விளையாட்டு போட்டிக்கு அழைத்துச் சென்ற இரண்டு ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள்
காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த பள்ளி மாணவிகளின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், தலா ரூ.2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளுக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.
Tags: தமிழக செய்திகள்