கணவர் வீட்டுக்கு புறப்பட்ட மணப்பெண்ணை பிரிய மனமில்லாமல் நாய் நடத்திய பாசப்போராட்டம் வைரல் வீடியோ
நாகர்கோவில் அருகே திருமணம் முடிந்து கணவர் வீட்டுக்கு புறப்பட்ட மணப்பெண்ணை பிரிய மனமில்லாமல் நாய் நடத்திய பாசப்போராட்ட வீடியோ வைரல் ஆகி வருகின்றது
நாகர்கோவில் அருகே சித்திரை, திருமகாராஜபுரத்தை சேர்ந்தவர் சுயம்பு. இவரது மகள் சுகப்பிரியா. இவருக்கு திருமணம் முடிந்து கணவர் வீட்டுக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி வீட்டில் நடைபெற்றதது. இதை கவனித்துக் கொண்டிருந்த சுகப்பிரியா செல்ல நாயிடமும் விடை பெற வந்ததும் அது வாலை ஆட்டிய படி எட்டி எட்டி முத்த மழை பொழிந்தது.
சுகப்பிரியாவும் அதை கட்டி பிடித்து முத்தம் கொடுத்து கலங்கிய கண்களுடன் இருந்தார், ஒருவழியாக நாயை தன்னிடமிருந்து விடுவித்து கொண்டு, மறுபடியும் கணவருடன் செல்ல முயன்றார்.. ஆனால், அந்த நாய், அவருடைய சேலை முந்தானையை பிடித்து இழுத்தது.. இந்த காட்சிகளை பார்த்த எல்லாருமே கலங்கி நின்றார்கள்.. இந்த பாசப்போராட்டம்தான் வீடியோவாகவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது..
வீடியோ பார்க்க:-
https://twitter.com/Autokabeer/status/1624409288268566532
Tags: வைரல் வீடியோ