பிரபாகரன் உயிருடன் இல்லை – இலங்கை ராணுவம் மறுப்பு..! ltte leader prabakaran
பிரபாகரன் உயிருடன் இல்லை – இலங்கை ராணுவம் மறுப்பு..!
இன்று தஞ்சையில் செய்தியாளர்களுக்கு பழ.நெடுமாறன் அவர்கள் பேட்டியளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர்,
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களைப் பற்றிய உண்மை அறிவிப்பு
I. சர்வதேசம் சூழலும், இலங்கையில் இராசபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்துக் கிளம்பியிருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிவையை உருவாக்கியுள்ளது.
2. இந்தச் சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதுவரை அவரைப் பற்றித் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம்
3. தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் அவர் அறிவிக்க இருக்கிறார். தமிழீழ மக்களும், உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம்.
4. விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும், எந்தக் காலகட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதிலும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மிக உறுதியாக இருந்தார். தற்போது இலங்கையில் ஆழமாகக் காலூன்றி இந்திய எதிர்ப்புத் தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும், இந்துமாக்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப்பார்த்து, அதனைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை வேண்டுகிறோம்.
5. இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழக அரசும், தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும், தமிழக மக்களும் ஒன்றுபட்டு நின்று தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குத் துணை நிற்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்
இலங்கை போரில் பிரபாகரன் 2009 மே- 18ஆம் தேதி இறந்ததாக கூறப்பட்ட நிலையில் பழ நெடுமாறனின் கருத்து உண்மையில்லை என்றும், பிரபாகரன் தற்போது உயிருடன் இல்லை என்றும் இலங்கை ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து இலங்கை ஊடகம் ஒன்று விடுதலை புலிகளின் அமைப்பின் தலைவர் பிரபாகரனை 2009 மே 18 அன்று இறுதிக்கட்ட போரில் கொன்றதற்கான ஆதாரங்கள் தம்வசம் உள்ளதாக இலங்கை ராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் கூறினார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்