நெசவாளர்களுக்கு 1,000 யூனிட் மின்சாரம் இலவசம் தமிழக முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் மின்சாரமும், விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு மாதம் 700 யூனிட் மின்சாரமும் இலவசமாக வழங்கப்பட்டுவந்தது. பொதுமக்களுக்கு மாதந்தோறும் 100 யூனிட் மின்சாரம் வழங்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் கைத்தறி நெசவாளர்களுக்கான மின்சாரம் மாதம் 300 யூனிட்டாகவும், விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கான இலவச மின்சாரம் மாதம் 1000 யூனிட்டாகவும் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசைத்தறி தொழிலாளர்களுக்கு 700 யூனிட் இலவச மின்சாரம் இருந்த நிலையில் அதை 1000 யூனிட்டாக முதலமைச்சர் ஸ்டாலின் உயர்த்தி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 700 யூனிட்டாக இருந்த நிலையில், 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மார்ச் 1 முன் தேதியிட்டு அமல்படுத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்