அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் ஓபிஎஸ் தரப்பு வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு தலைமையிலான அமர்வு விசாரித்தது. ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைமுறைகள் தொடரலாம் எனவும், தேர்தல் முடிவுகளை மார்ச் 24ஆம் தேதி வரை வெளியிட வேண்டாம் எனவும் உத்தரவிட்டனர். மார்ச் 24-ஆம் தேதி பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் கூறினர்.
அதன்பின்பு ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் 2022 ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்க்கும் வழக்குகளின் தீர்ப்பு இன்று வெளியாகி உள்ளது
தீர்ப்பு:-
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்தும், அதிமுக பொதுசெயலாளர் தேர்தல் குறித்தும் ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்கலாம் என்றும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக உள்ளார்.
இவர் நிரந்தர பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவதற்காக அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டது.
அந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே போட்டியிட்டார். அவர் மட்டுமே தேர்தலில் போட்டியிட்டதால் அவரே பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
Tags: அரசியல் செய்திகள்