தமிழக 29 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்க கட்டணம் உயர்வு
தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள டோல் பூத்களில் வசூலிக்கப்பட்டு வரும் சுங்க கட்டணம், ஆண்டுக்கு ஒருமுறை விலை மாற்றம் செய்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிப்பு வெளியிடுவது வழக்கம்.
அதேபோல் இன்று ஏப்ரல்-1 முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது.இதன்படி தமிழகத்தின் 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.55 வரை கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
சென்னையை பொறுத்தமட்டில் புறநகர் பகுதியில் உள்ள பரணூர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம், பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு அமலாகியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்