சவுதி ரியாத்தில் தீ விபத்தில் 6 இந்தியர்கள் பலி ! முழு விவரம் Riyadh fire 6 dead
சவுதி அரேபியாவின் ரியாத் பகுதியில் உள்ள கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 6 இந்தியர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், 4 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், உயிரிழந்தவர்கள் அனைவருமே அங்குள்ள பெட்ரோல் நிரப்பும் நிலையத்தில் புதியதாக பணிக்கு சேர்ந்தவர்கள் என தகவல் கிடைத்துள்ளது.
மேலும் அந்த தீ விபத்தில் இறந்தவர்களில் இருவர் மலப்புரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. மேல்மூரியைச் சேர்ந்த இர்பான் மற்றும் பைங்கன்னூரைச் சேர்ந்த அப்துல் ஹக்கீம் ஆகியோரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இச்சம்பவம் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் என்றும், மற்ற 2 பேர் குஜராத் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
தற்போது, சடலங்கள் அல்-சுமைசி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.முதற்கட்ட தகவல்களின்படி, கட்டிடத்தில் ஏற்பட்ட மின்சுற்று காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
News Source:-
https://english.mathrubhumi.com/news/nri/six-including-four-malayalees-killed-as-fire-breaks-out-inside-building-in-riyadh-1.8532565
Tags: வெளிநாட்டு செய்திகள்