டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் அணி இணைந்து செயல்பட முடிவு! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் அணி இணைந்து செயல்பட முடிவு!
ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து அறிவிப்பு
அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரனை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வத்துடன் பண்ருட்டி ராமச்சந்திரனும் செல்கிறார்.இன்று நடைபெறும் சந்திப்பில் இணைந்து செயல்படுவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவ, டிடிவி தினகரன், சசிகலாவுடன் இணைந்து செயல்படத் தயார் என்று ஓ.பன்னீர்செல்வம் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு முதல்வர் பதவியை சசிகலா ஏற்க இருந்தது. இதற்காக ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதன்பின்பு தர்ம யுத்தம் செய்து ஆட்சியை ஆட்டம் காண வைத்தார் சசிகலா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் காரணமாக அவர் சிறைக்கு செல்வதற்கு முன்பாக எடப்பாடி பழனிசாமியை முதல்வராக நியமித்தார். இதையடுத்து ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்ற தொடங்கினர் கடந்த நான்கு ஆண்டுகளாக இரட்டை தலைமையாக அதிமுக இயங்கி வந்தது. சமீபத்தில் ஒற்றை தலைமை தொடர்பாக அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்தது. இதனையடுத்து அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் இன்று டிடிவி தினகரனுடன் ஓ.பன்னீசெல்வம் சந்தித்துள்ளார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் அவர்கள் உண்மையான அதிமுக தொண்டர்கள் கையில் கட்சியை ஒப்படைப்பதே நோக்கம்.
அதிமுகவை மீட்க பன்னீசெல்வமும் நானும் ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம். அதிமுகவின் அனைத்து அடிப்படை தொண்டர்களும் இணையவேண்டும் என்பதே நோக்கம்.
எங்களுக்குள் எந்த பகையும் இல்லை சில காரணங்களுக்காக பிரிந்து இருந்தோம். இரண்டு இயக்கமும் ஒன்று சேர முடிவு செய்துள்ளோம். இது நீண்ட காலமாகவே யோசிக்கப்பட்டு வந்தது. கட்சியை காப்பாற்றவே இந்த முடிவை எடுத்துள்ளோம். கடந்த காலங்களை மறந்துவிட்டு இருவரும் ஒன்றிணைந்துள்ளோம்.” என்றார்.
Tags: அரசியல் செய்திகள்