விபத்துக்குள்ளான ரயிலிலிருந்து 2 நாட்களுக்கு பின் உயிரோடு மீட்கப்பட்ட அசாம் இளைஞர்
அதிசயம்:-
இந்நிலையில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில் உருக்குலைந்து கிடந்த ரயில் பாகங்களில் இருந்து முனகல் குரலைக் கேட்டுள்ளார் அங்கிருந்த போலீஸ் பணியாளர் அதன்பின்பு குரலை கேட்டு அங்கு சென்று பார்த்தபோது ஒரு வாலிபர் நொறுங்கிக் கிடந்த ரயிலுக்கு அடியில் இருந்துள்ளார் உடனடியாக அவரை மீட்ட காவல்துறையினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அதன்பின்பு விசாரனையில் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாம் கவுகாத்தியைச் சேர்ந்த 35 வயதான துலால் மசூம்தார் என்பது தெரிய வந்தது
இதுபோன்ற ஒரு ரயில் விபத்து நடந்து 48 மணி நேரத்திற்குப் பிறகு
ஒரு மனிதன் எப்படி உயிருடன் இருக்க முடியும் இரண்டு
நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்த போதிலும், இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்
அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், உள்ளூர் மருத்துவமனையின் மருத்துவர்கள் அவரை சிறப்பு சிகிச்சைக்காக பாலசோர் மருத்துவமனைக்கு மாற்றினர்.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனது நண்பர்கள் ஐந்து பேருடன் பயணம் செய்தார். எனினும், அவர்கள் உயிர் பிழைத்தார்களா என்பது தெரியவில்லை.விபத்து நடந்தபோது அவர் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் ஜெனரல் பெட்டியில் இருந்துள்ளார்.
Tags: இந்திய செய்திகள்