கோவில்களில் ஆடல் பாடல் நிகழ்சிக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்ட காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு
அட்மின் மீடியா
0
கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனைத்து மாவட்ட காவல் ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.அதில்
- ஆடல் பாடல் நிகழ்ச்சி இரவு 10 மணிக்கு மேல் நடக்க கூடாது.
- பெண் கலைஞர்களை ஆபாச ஆடையில் சித்தரிக்க கூடாது.
- இரட்டை அர்த்தங்கள் கொண்ட பாடல்களை ஆடல், பாடலில் இடம்பெற செய்யக்கூடாது.
- 7 நாள்களுக்குள் விழாக்குழுவுக்கு பதிலளிக்க வேண்டும்
- அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் விழா ஏற்பாட்டாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்