டிரெட்மில்லில் உடற்பயிற்சி - மாரடைப்பால் உயிரிழந்த இளைஞர் - அதிர்ச்சி சிசிடிவி வீடியோ
டிரெட்மில்லில் உடற்பயிற்சி மாரடைப்பால் உயிரிழந்த 19 வயது இளைஞர் அதிர்ச்சி சிசிடிவி வீடியோ
உத்ரபிரதேச மாநிலம் காஸியபாத் நகரில் ஜிம் டிரெட்மில்லில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த இளைஞர் மாரடைப்பால் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்லார்
உத்திரபிரதேசம் மாநிலம் காஸியாபாத்தில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
ட்ரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்தபோது நிலைகுலைந்த சித்தார்த் மயங்கி கீழே சரிந்துள்ளார். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் பதறியடித்துக்கொண்டு மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச்சென்றனர். ஆனால் மருத்துவர்கள் சித்தார்த்த் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது
இறந்தவர் காஜியாபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிடெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சித்தார்த் குமார் சிங் (19) என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவரது தந்தை கோடாவில் மளிகைக் கடை நடத்தி வருகிறார், அவரது தாயார் அரசுப் பள்ளி ஆசிரியராக உள்ளார்.
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ