மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் ஓட்டுனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம்
மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் ஓட்டுனர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம்
கோயம்புத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஓட்டுனர் பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
கல்வித் தகுதி :-
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மற்றும் மோட்டார் வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :-
இந்த பணியிடங்களுக்கு 18 வயது முதல் 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் : ரூ.19,500 – 62,000
தபால் முகவரி :-
ஆணையாளர்,
ஊராட்சி ஒன்றியம்,
மதுக்கரை
நிபந்தனைகள்:-
1.தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை https://coimbatore.nic.in இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கும் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
2.இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், மதுக்கரை என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 09.10.2023 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் அலுவலகத்திற்கு வந்தடையும் வகையில் அனுப்ப வேண்டும்.
3.இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் உள்ளவாறு விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
4.தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
5.காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.
6.எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.
மேலும் விவரங்களுக்கு;-
https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2023/09/2023091264.pdf
Tags: வேலைவாய்ப்பு