கனமழை காரணமாக இன்று பள்ளிகள் விடுமுறை எந்த எந்த மாவட்டம் தெரியுமா முழு விவரம் school leave
தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் மேலும்
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர் ,மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ,விருதுநகர், மதுரை, திருப்பூர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு தொடர் மழையால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்