Breaking News

ஒரே நபரின் பெயரில் 10 சிம்கள் இருந்தால் 3 ஆண்டுகள் சிறை புதிய சட்டம் முழு விவரம் how many sim card on my name

அட்மின் மீடியா
0

 ஒரே நபரின் பெயரில் 10 சிம்கள் இருந்தால் 3 ஆண்டுகள் சிறை - புதிய சட்டம் அமலுக்கு வந்தது.

ஒரு தனிநபர் பெயரில் 10 சிம் (Sim) கார்டுகள் வைத்திருந்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கும் புதிய சட்டம் அமல் தமிழ்நாடு

குற்றம் முதல்முறையாக கண்டறியப்பட்டால் ரூ.50,000 அபராதம், அதன்பிறகும் தொடர்ந்தால் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை அபராதம்


சிம் கார்டுகள் மூலம் ஏராளமான மோசடிகள் நடப்பதால், ஒருவர் பயன்படுத்தும் சிம் கார்டுகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.தொலைத்தொடர்புச் சட்டம் 2023-ன் கீழ், நாடு முழுவதும் ஒருவர் தனது பெயர் அதிகபட்சமாக 9 சிம்கார்டுகளை மட்டுமே பயன்படுத்தலாம் என்றும்,விதியை மீறினால் ரூ.2 லட்சம் அபராதம் அல்லது சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

செல்போன் எண்கள் மூலமாக பல மோசடிகளை செய்துவிட்டு, மோசடிக்குப் பயன்படுத்தும் சிம் கார்டுகளை தூக்கி எறிந்துவிட்டு புதிய சிம் கார்டுகள் மூலம் மோசடியை அரங்கேற்றும் மோசடிக் கும்பலை முடக்கவே, நாடு முழுவதும் ஒருவர் பயன்படுத்தும் சிம் கார்டுகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

உங்கள் பெயரில் உள்ள சிம் எண்களைத் தெரிந்துகொள்ள TAFCOP இணையதளத்தில் மொபைல் எண்ணை பதிவுசெய்து, உங்களது பெயரில் உள்ள எண்களை சரிபார்க்க முடியும். மேலும், அதில் உள்ள எண்களை நீக்கவும், தொடரவும் முடியும்.

உங்கள் பெயரில் எத்தனை சிம்கார்டு உள்ளது என ஆன்லைனில் கண்டுபிடிப்பது எப்படி  தெரிந்து கொள்ள் இங்கு கிளிக் செய்யவும்

check how many sim card on my name

https://www.adminmedia.in/2023/10/check-how-many-sim-card-on-my-name.html

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback