Breaking News

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம் post office agent

அட்மின் மீடியா
0

அஞ்சலகங்களின் முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம், தாம்பரம் கோட்டம், சென்னை -600 045 என்ற முகவரியிலுள்ள தாம்பரம் தலைமை அஞ்சலகத்தின் முதலாவது தளத்தில் 30.07.2024  அன்று காலை 11 மணிக்கு அஞ்சலக ஆயுள்  காப்பீடு விற்பனைக்கான முகவர்கள் தேர்வுக்கான நேர்காணல் நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள் கீழ்காணும்  தகுதிக்கான மூல சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் நேர்காணலில் பங்குபெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

 


முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்தவிருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் தகுதியை பெற்றிருப்பின் எண் 2, சிவஞானம் சாலை, தியாகராய நகர், சென்னை 600017 இல் (பாண்டி பஜார் அருகில்) உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில் 26.06.2023 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ள நேர்க்காணலில் கலந்து கொள்ளலாம்.

கல்வி தகுதி:-

குறைந்தது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு:- 

18 வயதில் இருந்து 50 வயது வரை

கூடுதல் தகுதிகள்;-

சுய தொழில் செய்யும் / வேலையில்லா இளைஞர்கள், 

ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள்/ முகவர்கள், 

அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளர்கள், 

சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், 

ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்கள்,

கணினிப் பயிற்சி உள்ளவர்கள் / சொந்தப்பகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.

இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை.

நேர்காணல்:-

மேற்கண்ட தகுதியுடையவர்கள் 

மூன்று புகைப்படத்துடன் (பாஸ்போர்ட் அளவு), 

அசல் மற்றும் இரண்டு நகல் -வயதுச்சான்று, 

முகவரிச்சான்று மற்றும் கல்விச்சான்றுடன் அனுகவும். 

நேர்க்காணலுக்கு பின் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கு தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை பணப் பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும்.

இந்த நேர்க்காணல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை முகவர்கள் மூலம் விற்பனை செய்வதற்காக நடத்தப்படுகிறது. 

முகவர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பிடிக்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும். என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படுவோர் தேசிய சேமிப்பு சான்றிதழ் அல்லது  குடியரசு தலைவரின் பெயரில் உறுதியளிக்கப்பட்ட கிசான் விகாஸ் பத்திரம் வடிவில் ரூ.5,000 காப்பீட்டு தொகையாக செலுத்தவேண்டும். 

தற்காலிக உரி்ம கட்டணமாக ரூ. 50 செலுத்தவேண்டும். 

விண்ணப்பதாரர் பாஸ்போர்ட் அளவிலான ஒரு புகைப்படம், 

பான் அல்லது ஆதார் அட்டையின் நகல், 

கல்வித்தகுதி சான்றிதழ்களின் நகல்கள் 

ஆகியவற்றை கொண்டுவரவேண்டும். பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2031803

postal life insurance recruitment 2024

Post Office Recruitment 2024

india post agent

post office agent

pli post office

postal life insurance plan details

pli agent portal

pli scheme post office

pli agent

postal life insurance agent

pli agent commission

postal life insurance agent commission

pli incentive structure

postal life insurance salary

post office agent apply online

pli eligibility

pli agent commission chart

pli agent salary

india post agent

agent india post

post office agents

dop agent indiapost

dop agent portal

dop agent app

post office rd agent

how to become post office agent

post office agent apply online

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback