Breaking News

கேரளாவில் நிஃபா வைரஸால் 14 வயது சிறுவன் உயிரிழப்பு - தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

அட்மின் மீடியா
0

கேரள மாநிலத்தில் நிஃபா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 14 வயது சிறுவன் உயிரிழப்பு



கேரள மாநிலத்தில் நிஃபா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். மலப்புரத்தைச் சேர்ந்த சிறுவனுக்கு நிஃபா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் நிபா வைரஸ் குறித்து தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

காய்ச்சல், தலைவலி, மயக்கம், சுவாசப் பிரச்சினை, மனநல பிரச்சினை ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும்.

ரத்தம், தொண்டை சளி மற்றும் சிறுநீர் மாதிரிகள் எடுக்க வேண்டும். 

அறிகுறிகள் கண்டறியப்பட்ட நோயாளிகளை உடனடியாக கண்டறிந்து உரிய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

பரிசோதனையின் முடிவுகளை தொடர்ந்து சுகாதாரத்துறைக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.

பரிசோதனை மேற்கொள்ளும் போது உரிய பாதுகாப்பு கவசம் அணிந்து சுகாதாரத்துறையினர் நோயாளிகளை கையாள வேண்டும்.

நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்படும் மாதிரிகள் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெள்ள நிலையில் பாதுகாக்கப்பட்டு 48 மணி நேரத்திற்குள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.

காய்கள் மற்றும் பழங்களை சாப்பிடும் போது நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும்.

கிணறுகள், குகைப் பகுதிகள், தோட்டங்கள், இருள் சூழுந்த பகுதிகளில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

அறிகுறிகள் கண்டறியப்படும் நோயாளிகள் மற்றும் அவரது தொடர்பில் இருப்பவர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்துதல் அவசியம்.போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback