Breaking News

சென்னையில் ஜூலை 23 முதல் ஆகஸ்டு 14 ம் தேதி வரை 55 மின்சார ரயில்கள் ரத்து முழு விவரம்

அட்மின் மீடியா
0

 சென்னையில் ஜூலை 23 முதல் ஆகஸ்டு 14 ம் தேதி வரை 55 மின்சார ரயில்கள் ரத்து முழு விவரம்



சென்னையில் 2024 ஜூலை 23 முதல் 2024 ஆகஸ்ட் 14 வரை 55 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- 

தாம்பரம் யார்டு ரயில்வே ஸ்டேஷனின் 2ம் கட்ட புனரமைப்பு பணியுடன் சேர்ந்து தாம்பரம் யார்டுவில் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதி கிடைத்துள்ளது. பயணிகள் மற்றும் ரயில்களின் பாதுகாப்பு கருதி இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 

இந்த பணியின் காரணமாக ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் )14-ம் தேதி வரை 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது.

அதன்படி ஜூலை மாதம் 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே தினமும் காலை 9.30, 9.56, 10.56, 11.40, மதியம் 12.20, 12.40, இரவு 10.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கமாக செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு தினமும் காலை 11.00, 11.30 மதியம் 12.00, இரவு 11.00 உள்ளிட்ட நேரங்களில் புறப்பட்டு செல்லும் ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே தினமும் காலை 9.40, 9.48, 10.04, 10.12, 10.24, 10.30, 10.36, 10.46, 11.06, 11.14, 11.22, 11.30, 11.50, மதியம் 12, 12.10, 12.30, 12.50 இரவு 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் ஜுலை 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட உள்ளது.

மறுமாரக்கமாக சென்னை தாம்பரம் - கடற்கரை நோக்கி காலை 10.30, 10.40, 11, 11.10, 11.30, 11.40, மதியம் 12.05, 12.35, 1, 1.30, இரவு 11.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செல்லும் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை - கூடுவாஞ்சேரி இடையே இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 உள்ளிட்ட நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்களும் மேற்கூறிய தினங்களில் ரத்து செய்யப்படுகின்றன.

மறுமார்க்கமாக கூடுவாஞ்சேரியிலிருந்து இரவு 8.55, 9.45, 10.10, 10.25, 11.20 உள்ளிட்ட நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன.

செங்கல்பட்டில் இருந்து தினமும் காலை 10 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு புறப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகின்றன 

காஞ்சிபுரத்தில் இருந்து தினமும் காலை 9.30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகின்றன, 

திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகின்றன

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback