Breaking News

ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
ஆடிபெருக்கு மற்றும் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார். ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு



ஆகஸ்ட் 3ம் தேதி ஆடிபெருக்கு மற்றும் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு அன்றைய தினம் சேலம் மாவட்டதில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் பிறிதொரு நாள் பணிநாளாக அறிவிக்கப்படும்.

இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு ஆகஸ்டு 3-ம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படாது” என்று கூறப்பட்டுள்ளது. எனினும் முக்கிய அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback