Breaking News

குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் பலி Four member family from Kerala killed in fire accident in Kuwait

அட்மின் மீடியா
0

குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் பலி Four member family from Kerala killed in fire accident in Kuwait


குவைத்தின் அப்பாசியாவில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மலையாள குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

இறந்தவர்கள் மேத்யூ முழக்கல், அவரது மனைவி லினி ஆபிரகாம் மற்றும் அவர்களது குழந்தைகள் ஐசக் மற்றும் ஐரீன், இவர்கள் அனைவரும் கேரளா, திருவல்லாவைச் சேர்ந்தவர்கள்.

அந்த குடும்பத்தினர் வசித்து வந்த இரண்டாவது மாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது.இச்சம்பவம் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விடுமுறை முடிந்து சொந்த ஊருக்கு வந்து குவைத் திரும்பிய குடும்பத்தினர், இரவில் அவர்களது வீட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அறை முழுவதும் புகையாக இருந்ததால் அவர்களால் வெளியே வர முடிய வில்லை. இதனால் மேத்யூஸ், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்பட 4 பேரும் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த குறித்து தகவலறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஏ.சி.யில் ஏற்பட்ட பழுது காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/TheSouthfirst/status/1814552900795793805

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback