Breaking News

மதுரை நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் 4 பேர் கைது - கொலைக்கான காரணம் இதுதான் கொலையாளிகள் வாக்குமூலம்

அட்மின் மீடியா
0

மதுரை நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் 4 பேர் கைது - கொலைக்கான காரணம் இதுதான் கொலையாளிகள் வாக்குமூலம்

நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மதுரை மாநகராட்சி செல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன். இவர் நாம் தமிழர் கட்சியில் மதுரை மாநகர் வடக்கு தொகுதி துணைச் துணைச் செயலாளராக இருந்து வந்தார்.

நேற்று இன்று காலை வழக்கம் போல் வாக்கிங் சென்று கொண்டிருந்த போது அவரைப் பின்தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல்  கும்பல் பாலசுப்ரமணியனை கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் போலீசார் உயிரிழந்த பாலசுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர். 

மேலும் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்திவந்த நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக பரத், நாக இருள்வேல், கோகுலகண்ணன், பென்னி உள்ளிட்ட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குடும்பப்பிரச்னை காரணமாகவே கொலை நடந்தது தெரியவந்தது. 

பாலசுப்ரமணியனின் தம்பி பாண்டியராஜன் குடும்பத்தினருக்கு உறவினர் மகாலிங்கம் பெண் கொடுத்துள்ளார். அந்த பெண் பிரிந்து வாழ்வதாக தெரிகிறது. இதுதொடர்பாகவும், சொத்து பங்கு பிரிப்பது தொடர்பாகவும் இரு குடும்பத்தினரிடையே பிரச்சனை இருந்துள்ளது. 

இந்நிலையில், மகாலிங்கம் மற்றும் அவரது மகன் அழகுவிஜய், அவர்களிடம் லோடு மேன்களாக வேலை செய்து வரும் பரத், நாக இருள்வேல், கோகுலகண்ணன் மற்றும் பென்னி ஆகியோருடன் சேர்ந்து பாலசுப்ரமணியனை கொலை செய்துள்ளனர்.என தகவல்கள் வெளியாகி உள்ளது

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback