Breaking News

காதல் விவகாரம் - பிரியாணி கடையில் இளைஞர் படுகொலை - பெண்ணின் இரட்டை சகோதரர்கள் உட்பட 4 பேர் கைது

அட்மின் மீடியா
0

காதல் விவகாரம் - பிரியாணி கடையில் இளைஞர் படுகொலை - பெண்ணின் இரட்டை சகோதரர்கள் உட்பட 4 பேர் கைது

 


41m1 sharesசெய்தியாளர்: சே.விவேகானந்தன்தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி ஓட்டல் செயல்பட்டு வருகிறது.இந்த ஓட்டலில் மாஸ்டராக தருமபுரி வி.ஜெட்டி அள்ளியை சேர்ந்த முகமது ஆசிக் (25) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ஓட்டலில் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஓட்டலுக்கு 4 பேர் வந்துள்ளனர். அப்போது அவர்களில் 2 பேர் கத்தியால் ஆசிக்கை குத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.Accusedதகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல் துறையினர், முகமது ஆசிக்கை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முகமது ஆசிக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதையடுத்து தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்டீபன் ஜேசுபாதம், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். பின்னர் மோப்பநாய் ரேடவ் வரவழைக்கப்பட்டு கொலையாளிகள் குறித்த தடயங்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.இதைத் தொடர்ந்து ஓட்டலில் உள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து கொலையாளிகளை அடையாளம் கண்ட காவல் துறையினர், தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், முகமது ஆசிக் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்தக் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணின் சகோதரர்கள் முகமது ஆசிக்கை கண்டித்ததுள்ளதாகவும் தெரிகிறது. இதனால், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது ஆசிக் காதலித்த பெண்ணின் சகோதரர்களான ஜன ரஞ்சன், ஜன அம்சபிரியன் இரட்டை சகோதரர்கள் என்பது தெரியவந்துள்ளது.Arrestedசென்னை|"எவ்வளவு உயரத்தில் இருக்கிறேன் பார்" - தோழியிடம் வீடியோ கால் பேசிய மாணவன் கால்தவறி உயிரிழப்பு

 

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இலக்கியம்பட்டியில் பிரியாணி கடையில்  பணிபுரியும் ஊழியரை சரமாரி குத்தி படுகொலை செய்த கும்பல் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது

 

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இலக்கியம்பட்டியில் கடந்த 6 -ம் தேதி புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் கிரில் மாஸ்டராக முகமது ஆசிக் (25) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர் வழக்கம்போல் இரவு ஓட்டலில் பணியில் ஈடுபட்டிருந்தபோது சுமார் இரவு 10 மணிக்கு ஓட்டலுக்கு 4 பேர் வந்துள்ளனர். 

அப்போது அவர்களில் 2 பேர் முகமது ஆசிக்கிடம் பேசுவது போல் பேசி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தியுள்ளனர். உடனடியாக சுதாரித்து கொண்டு தப்ப முயன்ற முகமது ஆசிப்பை ரவுண்டு கட்டி சூழ்ந்து சராமரியாக வெட்டியுள்ளார்கள் இதில் படுகாயம் அடைந்த முகமது ஆசிப் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.உடனடியாக கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முகமது ஆசிக்கை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முகமது ஆசிக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 


இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வரும் போலீசார்  ஓட்டலில் உள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து கொலையாளிகளை அடையாளம் கண்டு   தனிப்படை அமைத்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

போலிஸ் விசாரனையில் முகமது ஆஷி சேலம் மாவட்டத்தில் கேட்டரிங் படித்து இருக்கிறார். அப்போது அதே கல்லூரியில் படித்த ஒரு மாணவியும், முகமது ஆசிக்கும் காதலிக்க, இருவரின் காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் கத்தியுடன் வந்து முகமது ஆசிக்கை கொலை செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து செட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரர்கள் ஜன ரஞ்சன், ஜன அம்சபிரியன், மற்றும் நண்பர்கள் கௌதம், பரிதி வளவன் ஆகிய நான்கு பேரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2024/07/blog-post_59.html

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback