Breaking News

சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மோதல் 5 பேர் காயம் நடந்தது என்ன வீடியோ இணைப்பு

அட்மின் மீடியா
0

எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மோதல் - நாற்காலிகளை வீசியதால் பரபரப்பு

 


சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தின் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செந்தில்நாதன் மற்றும் அவருடைய தம்பி கோபி மற்றும் சிலர் வழக்கு சம்பந்தமாக எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர் விஜயகுமார், விமல், சுரேஷ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இருதரப்பை சேர்ந்தவர்களும் ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை வீசிக்கொண்டதுடன் கைகளால் தாக்கி கொண்டனர். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர். இதில் இருதரப்பை சேர்ந்தவர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனை சென்றுள்ளனர். 

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/Crime_Selvaraj/status/1814272768055312479


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback