Breaking News

நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 63 பயணிகளுடன் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பேருந்துகள் மீட்பு பணி தீவீரம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி 63 பயணிகளுடன் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பேருந்துகள்  மீட்பு பணி தீவீரம் முழு விவரம்

நேபாளத்தில் நிலச்சரிவின்போது இரண்டு பேருந்துகள் சிக்கி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. மதான் - அஷ்ரித் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரு பேருந்துகள் ஆற்றில் கவிழ்ந்தன.



நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, திரிசூலி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக, மதன் - ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு, வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில், சாலையில் சென்றுகொண்டிருந்த இரண்டுப் பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு, சாலையின் பெரும்பகுதி ஆற்றில் வெள்ளப்பெருக்குடன் அடித்துச் செல்லப்பட்டபோது, சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்துகளும் ஆற்றில் விபந்ததாகக் கூறப்படுகிறது.

பேருந்து ஓட்டுநர்கள் உள்பட இரண்டு பேருந்துகளிலும் 63 பயணிகள் இருந்துள்ளனர். தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. 

Tags: இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback