Breaking News

ரயில் பாலத்தில் செல்பி திடீரென வந்த ரயில் உயிரை காக்க 90 அடி பள்ளத்தில் குதித்த கணவன் மனைவி அதிர்ச்சி வீடியோ

அட்மின் மீடியா
0

ரயில் பாலத்தில் செல்பி எடுக்கும் போது திடீரென வந்த ரயில் உயிரை காப்பாற்றி கொள்ள 90 அடி பள்ளத்தில் குதித்த கணவன் மனைவி அதிர்ச்சி வீடியோ

ராஜஸ்தான்: ராகுல் மேவாடா தனது மனைவி ஜாஹ்னவியுடன் பாரம்பரிய பாலத்தில் போட்டோ ஷூட் செய்து கொண்டிருந்தார்.அப்போதுதான் ரயில் வந்தது. ரயிலில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள இருவரும் 90 அடி ஆழமுள்ள பள்ளத்தில் குதித்தனர்.- இருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராகுல் மேவாரா (22) மற்றும் அவரது மனைவி ஜான்வி (20) தம்பதியர், திருமணம் முடிந்து போட்டோ ஷூட் எடுக்க் ராஜஸ்தானில் உள்ள பாலி மாவட்டம் ரயில் பாலத்தில் புகைப்படம் எடுக்க முயன்றனர், ஆனால் அப்போது தண்டவாளத்தில் ரயில் வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து, 90 அடி ஆழமான பள்ளத்தில் குதித்தனர்.

ஆனால் அவசரகால பிரேக் பிடித்து ரயிலை நிறுத்தினார் டிரைவர். திடீரென ரயில் வந்தவுடன் ரயில் வந்து மோதிவிடும் என்று நினைத்து 90 அடி பள்ளத்தில் விழுந்து பலத்த அடி.

அந்த தம்பதியினர் இருவருக்கும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளார்கள் இது தொடர்பான அதிர்ச்சியான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/Saranjournalist/status/1812493563785011409

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback