Breaking News

குழந்தையை கடித்து குதறிய குரங்குகள் அதிர்ச்சியூட்டும் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

குழந்தையை கடித்து குதறிய குரங்குகள் அதிர்ச்சியூட்டும் வைரல் வீடியோ  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது



உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் வெள்ளிக்கிழமை பிருந்தாவனில் உள்ள மதன் மோகன் கெரா பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுவன் தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தபோது

அந்த ஏரியாவில் இருந்த குரங்குகள் கூட்டம்  அந்த சிறுவனை பிடித்து கீழே தள்ளிவிட்டது. கீழே தள்ளி இரண்டு குரங்குகள் அந்த சிறுவனை கடுமையாக தாக்கிவிட்டது.

இந்நிலையில் சிறுவன் குரங்கு தாக்குதல் தாங்கமுடியாமல் கதறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற ஒருவர் ஓடி வந்து குரங்குகளை துரத்தி அடித்துவிட்டு சிறுவனை மீட்டார். 

ஆனால் குழந்தையை கடித்து குதறும் சமயத்தில் அருகில் 3 பெண்கள் இருந்தும் அந்த குழந்தைக்கு உதவ முன்வரவில்லை ஆனால் அந்தபெண்கள் அதனை பார்த்துக் கொண்டே செல்கின்றார்கள்

இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

 https://x.com/DeepikaBhardwaj/status/1812769274596900873


Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback