Breaking News

பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா உயிரிழந்தார் முழு விவரம்

அட்மின் மீடியா
0
தமிழில் பாலிமர், சத்யம், நியூஸ் தமிழ் உள்ளிட்ட பிரபல தனியார் செய்தி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் சௌந்தர்யா.
 
கள்ளக்குறிச்சியை சேர்ந்த இவருக்கு கடந்த ஆண்டு உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இவருக்கு புற்றுநோய் 4வது ஸ்டேஜில் இருப்பது கண்டறியப்பட்டது.
 

 
இவரின் மருத்துவ உதவிக்காக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இவருடைய சிகிச்சைக்காக 5 லட்சம் கொடுத்து உதவினார்.கடந்த 6 மாதமாக இவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback