Breaking News

சென்னையில் சுருக்கு பையில் இருந்த பணத்திற்க்காக மூதாட்டியை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி கூவத்தில் வீசிய கணவன் மனைவி கைது

அட்மின் மீடியா
0

சென்னை| மூதாட்டியை கொலை செய்து ஆற்றில் வீசிவிட்டு ‘காணவில்லை’ போஸ்டர் ஒட்டிய நபர்! 

கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால் மூதாட்டி அடித்துக் கொள்ளப்பட்டு, உடல் ஆற்றில் வீசப்பட்ட கொடூரம் சென்னையில் நிகழ்ந்துள்ளது. 

சென்னை எம்ஜிஆர் நகர் மயிலை சிவமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் 78 வயது மூதாட்டி விஜயா. இவர் ஓட்டலில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 17 ஆம் தேதி வேலைக்கு சென்ற மூதாட்டி அதன்பின்னர் வீட்டிற்கு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மகள் லோகநாயகி எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விஜயாவை தேடி வந்தனர்.அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன விஜயாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். 



இதையடுத்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது,பார்த்திபன் தன் இருசக்கர வாகனத்தில் மனைவி சங்கீதாவுடன் இருசக்கர வாகனத்தின் முன் பகுதியில் மூட்டை ஒன்றை வைத்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.

இதனிடையே, கடந்த ஜூலை 23ஆம் தேதி விஜயாவின் வீட்டின் அருகே வசித்து வந்த பார்த்திபன் என்பவரை விசாரணைக்கு வரும்படி போலீசார் அழைத்துள்ளனர். 

ஆனால், அவர் வீட்டை காலி செய்து விட்டதாகக் கூறப்பட்டது.அதன் பின்னர், சந்தேகம் அடைந்த போலீசார் பார்த்திபனின் செல்போன் டவர் சிக்னலை வைத்து தேடி வந்த நிலையில் விருதுநகரில் இருந்த பார்திபன் அவரது மனைவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது, மூதாட்டி விஜயாவை பார்த்திபன் மற்றும் அவரது மனைவி சங்கீதா கொலை செய்து, உடலை மூட்டை கட்டி வீசியதாகவும், அவர் அணிந்து இருந்த தங்க நகைகளை திருடியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.


தொடர் விசாரணையில் பார்த்திபன் மீது கே.கே.நகர் காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கு இருப்பதும் தெரிய வந்தது.மேலும் செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்ததில்,பார்த்திபனும் அவரது மனைவி சங்கீதாவும் விருதுநகரில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

தனிப்படை போலீசார் விருதுநகர் விரைந்து 2 பேரையும் நேற்று கைது செய்தனர்.முதற்கட்ட விசாரணையில், மூதாட்டி விஜயாவை இருவரும் சேர்ந்து நகைக்காக துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து உடலை மூட்டைக்கட்டி அடையாற்றில் வீசியது தெரியவந்துள்ளது.

அதில் கொலை செய்யப்பட்ட மூதாட்டி விஜயாவின் மகள் லோகநாயகியிடம், பார்த்திபன் - சங்கீதா தம்பதி 20 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றது தெரிவயந்துள்ளது.பின்னர், லோகநாயகி கடனை திருப்பிக் கொடுக்கும்படி பலமுறை கேட்ட போது, விரைவில் தந்து விடுவதாக தெரிவித்துள்ளனர். 

இதனிடையே, மூதாட்டி விஜயா தனது சுருக்குப் பையில் பணம் வைத்திருந்ததை சங்கீதா பார்த்துள்ளார். அதனைத் தொடர்ந்து விஜயா வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தபோது, சங்கீதா அவரிடம் சுருக்குப் பயில் வைத்திருந்த பணத்தை பிடுங்கி உள்ளார்.

அப்போது விஜயா சத்தம் போட்டதால், அருகில் கிடந்த இரும்புக் கம்பியை எடுத்து மூதாட்டியை தாக்கி உள்ளார். இதில் மயக்கம் அடைந்து கீழே விழுந்த விஜயாவை பார்த்திபனும், சங்கீதாவும் சேர்ந்து அவரது வீட்டிற்கு தூக்கிச் சென்று, இருவரும் சேர்ந்து மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டி சாக்குப் பையில் மூட்டை கட்டியுள்ளனர்.

பின்னர், இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலை கழுவுநீர் கால்வாயில் வீசிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

அதன் அடிப்படையில், மூதாட்டியின் உடலை கால்வாயில் தேடிவந்த போலீசார், உடலை மீட்டு கேகே நகர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback