Breaking News

நாம் தமிழர் நிர்வாகி ஓட ஓட வெட்டி படுகொலை மதுரையில் பரபரப்பு நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 



மதுரை மாநகராட்சி செல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன். இவர் நாம் தமிழர் கட்சியில் மதுரை மாநகர் வடக்கு தொகுதி துணைச் துணைச் செயலாளராக இருந்து வந்தார்.

இவர் இன்று காலை வழக்கம் போல் வாக்கிங் சென்று கொண்டிருந்த போது அவரைப் பின்தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல்  கும்பல் பாலசுப்ரமணியனை கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் போலீசார் உயிரிழந்த பாலசுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback