நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது
நில அபகரிப்பு வழக்கில், கேரளாவில் பதுங்கி இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது!
ரூ.100 கோடி நிலமோசடி புகாரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஏழு பேர் மீது கரூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
மேலும் தலைமறைவாக உள்ள விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு முன் ஜாமின் கோரி, அவரது சகோதரர் எம்.ஆர்.சேகர் நேற்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.இந்நிலையில் கேரளாவில் பதுங்கி இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்