Breaking News

கன்னியாகுமரியில் காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டிக்கொலை! நடந்தது என்ன முழு விபரம்

அட்மின் மீடியா
0

கன்னியாகுமரியில் காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டிக்கொலை!  நடந்தது என்ன முழு விபரம்

 

கன்னியாகுமரி மாவட்டம் மூவாற்றுமுகம் பகுதியை சேர்ந்தவர் ஜாக்சன் இவர் டிரைவராக உள்ளார் இவரது மனைவி உஷா ராணி. இவர் திருவட்டார் பேரூராட்சி 10 வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலராக உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். 

இந்த நிலையில் நேற்று இரவு ஜாக்சன் வீட்டின் அருகில் உள்ள தேவாலயம் அருகே  இருந்த போது  இரண்டு பைக்கில் வந்த 6 பேர் கும்பல் ஜாக்ஸனை சராமரியாக தாக்கி அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுளார்கள்

அப்பகுதி மக்கள் ஜாக்சனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.இந்நிலையில்  சிகிச்சை பலனின்றி இன்று காலை ஜாக்சன் உயிரிழந்துள்ளார்.தகவல் அறிந்து விரைந்து வந்த திருவட்டார் போலீசார் விசாரணை நடத்தியதில் ஜாக்சனை வெட்டியது வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்த ராஜகுமார் என்ற விலாங்கன் என்பது தெரியவந்துள்ளது.  காட்சிகளை கைப்பற்றிய போலீசார் கொலையில் தொடர்புடைய நபர்களை தேடிவருகின்றனர்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback