Breaking News

பிரியாணி கடையில் கொல்லப்பட்ட முகமது ஆஷிக் கொலைக்கான காரணம் என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இலக்கியம்பட்டியில் பிரியாணி கடையில்  பணிபுரியும் ஊழியரை சரமாரி குத்தி படுகொலை செய்த கும்பல் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது

 

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இலக்கியம்பட்டியில் கடந்த 6 -ம் தேதி புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் கிரில் மாஸ்டராக முகமது ஆசிக் (25) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர் வழக்கம்போல் இரவு ஓட்டலில் பணியில் ஈடுபட்டிருந்தபோது சுமார் இரவு 10 மணிக்கு ஓட்டலுக்கு 4 பேர் வந்துள்ளனர். 

அப்போது அவர்களில் 2 பேர் முகமது ஆசிக்கிடம் பேசுவது போல் பேசி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தியுள்ளனர். உடனடியாக சுதாரித்து கொண்டு தப்ப முயன்ற முகமது ஆசிப்பை ரவுண்டு கட்டி சூழ்ந்து சராமரியாக வெட்டியுள்ளார்கள் இதில் படுகாயம் அடைந்த முகமது ஆசிப் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.உடனடியாக கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முகமது ஆசிக்கை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முகமது ஆசிக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 


இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வரும் போலீசார்  ஓட்டலில் உள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து கொலையாளிகளை அடையாளம் கண்டு   தனிப்படை அமைத்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

போலிஸ் விசாரனையில் முகமது ஆஷி சேலம் மாவட்டத்தில் கேட்டரிங் படித்து இருக்கிறார். அப்போது அதே கல்லூரியில் படித்த ஒரு மாணவியும், முகமது ஆசிக்கும் காதலிக்க, இருவரின் காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் கத்தியுடன் வந்து முகமது ஆசிக்கை கொலை செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி வைரலாகி வருகின்றன.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/AnbalaganMannan/status/1817185995818999824

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback