Breaking News

பிரியாணி மேன் என்று அழைக்கப்படும் யூடியூபர் அபிஷேக் ரவி கைது! நடந்தது என்ன முழு விவரம்

அட்மின் மீடியா
0

பிரியாணி மேன் என்று அழைக்கப்படும் யூடியூபர் அபிஷேக் ரவியை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்

பெண் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது.


பிரபல யூடியூபர் பிரியாணி மேன் பிரபல யூடியூபர் இர்ஃபான் மற்றும் பெண் யூடியூபர்களை பற்றி, பிரியாணி மேன் வெளியிட்ட வீடியோக்கள் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

அதோடு, யூடியூப் நேரலையில் அபிஷேக் ரவி தற்கொலை முயற்சியையும் மேற்கொண்டார். தற்கொலை செய்வது சட்டப்படி குற்றம் என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். 

மேலும் பிரியாணி மேன் வெளியிட்டுள்ள  வீடியோக்களில் சில பெண் யூடீயூபர்கள் பற்றி பிரியாணி மேன் பேசியிருந்த வீடியோக்களும், வைரலாகி சர்ச்சையாகின. 

கடந்த ஒரு வார காலமாக இந்த சர்ச்சை பேசப்பட்டு வரும் நிலையில், அபிஷேக் யூடியூப் லைவ் வீடியோவில் தற்கொலைக்கு முயன்றார். தற்போது சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback