Breaking News

சட்டம், ஒழுங்கை காப்பாத்துற போலீசுக்கே இந்த நிலைமையா என பரவும் வீடியோ தமிழ்நாட்டில் நடந்தது இல்லை உண்மை என்ன

அட்மின் மீடியா
0

சட்டம், ஒழுங்கை காப்பாத்துற போலீசுக்கே இந்த நிலைமையா என பரவும் வீடியோ தமிழ்நாட்டில் நடந்தது இல்லை 

பரவும் வதந்தி:-

சட்டம், ஒழுங்கை காப்பாத்துற போலீசுக்கே இந்த நிலைமையா என ஒர் வீடியோ சமூகவலை தளங்களில் வைரல் ஆகின்றது

அந்த வீடியோவில் ஓரு காவலரை கட்டயால் ஒருவர் அடிக்கின்றார் , உடனடியாக அருகில் உள்ளவர்கள் அந்த போலீசாரை காப்பாற்றுகின்றார்கள் அந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து இது தமிழ்நாட்டில் நடந்தது போல் சட்டம், ஒழுங்கை காப்பாத்துற போலீசுக்கே இந்த நிலைமையா என பதிவிடுகின்றார்கள்




உண்மை என்ன:-

அந்த வீடியோ ஆந்திராவில் உள்ள திருப்பதி அருகே கடந்த 20.07.2024 அன்று நடந்தது ஆகும்  

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள திருப்பதி மாவட்டத்திற்க்குட்பட்ட கூடூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருக்கும் சாமிதாஸ் என்பவரை 

கடந்த 20.07.2024 அன்று மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த கலிந்தா என்பவர் குடிபோதையில் தீடீரென அருகில் இருந்த வேப்பமரக்கிளையால் தலைமை காவலர் சாமிதாஸை தாக்கியுள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி வீடியோவில் பதிவாகி உள்ளது

உடனடியாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பிரபல ஊடகமான இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது, ஆனால் இச்சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததாக தவறாக பரப்பப்படுகிறது.


அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.indiatoday.in/india/story/video-drunk-man-attacks-andhra-cop-with-tree-branch-arrested-2569364-2024-07-20

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback