Breaking News

குண்டர் சட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்.

அட்மின் மீடியா
0

 சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்

குண்டர் சட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்.சவுக்குகுண்டர் சட்டத்தின் கீழான கைதுக்கு எதிரான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. இந்நிலையில் 

யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாயார் கமலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்தார். 

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இரு தர்ப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு இடைக்காலப்பிணையை வழங்கினர். 

மேலும் இந்த பிணை உத்தரவு இந்த குறிப்பிட்ட வழக்கிற்கு மட்டும்தான் என்றும் மற்ற வழக்குகளுக்கு இது பொருந்தாது என்றும் குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவுக்கு எதிராக அவரது தாயார் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கும் என்றும் நீதிபதிகள் தெளிவு படுத்தினர்.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback